Wednesday 21 March 2018

தென்றலின் பெருமாள் தியானம்

காம இச்சைகளை அகற்றும் தியானம்


பெருமாள் தியானம்:


உங்களின் காமச் சிந்தனைகளை முழுவதுமாக குறைக்ககூடிய, உங்களின் வாழ்க்கையைப் பிரகாசமாக மாற்றக்கூடிய, தேவையில்லாத  எண்ணங்களை அறவே நீக்கி, வாழ்வின் நெறிகளை உணர்த்தி, வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு அற்புத தியானப் பயிற்சி.




செய்முறை விளக்கம்:

  • முதலில் தரையில்  வலதுப் புரமாக  திரும்பி (ஒருக்களித்து) படுத்துக்கொள்ளவும்.
  • வலது கையை தலைக்கு முட்டு கொடுத்து தாங்கியப்படி இருக்க வேண்டும்.
  • தலையை வான் நோக்கி  அண்ணார்ந்து பார்த்தப்படி கண்களை மூடியவாறு இருக்க வேண்டும்.
  • பிறகு வலது காலை மடித்து அதன் பாதத்தின் குழிப் பகுதியை, நீட்டியிருக்கும் இடது காலின் மூட்டின் மீது வைத்து கொள்ள வேண்டும் .
  • அடுத்ததாக சுவாசத்தை ஆழப்படுத்த வேண்டும். அதாவது ஆழமாக சுவாசிக்க வேண்டும்.
  • இவ்வாறு சுவாசத்தை குறைந்தது இருபது நிமிடமாவது செய்ய வேண்டும்.
  • இவ்வாறு சுவாசிக்கும் போது மூச்சானது இட கலையில் ஓடுகிறது.
  • எனவே எண்ணம் சீரமைக்கப்பட்டு, ஆசைகள் ஒழுங்குப் படுத்தப்படுகிறது.
  • இதை தினமும் குறைந்தது இருபது நிமிடம் செய்து வந்தால் மனதில்  தோன்றும் தேவையற்ற எண்ணங்கள் விலகி வாழ்வில் வெற்றியடைய வழிவகுக்கிறது.


இதனை செய்து வரும்பொழுது குறுகிய காலத்திலே  இதற்கான மாற்றத்தினை நீங்கள் காணலாம் (உணரலாம்) .



எனது நேரடி பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்களை அறிய  +918903078128




மேலும் தெரிந்துகொள்ள-Tendral International Foundation Tv - இதை கிளிக் செய்யவும்.



உங்களின் உடல், மனம் மற்றும் ஆத்மா, ஆகியவை தூய்மை பெற,

எனது அன்பும், அரவணைப்பும், ஆசிர்வாதமும், உங்களுக்கு என்றும் உண்டு......!!
                                                   


    


-ஹீலர் தென்றல் 

No comments:

Post a Comment