காம இச்சைகளை அகற்றும் தியானம்
பெருமாள் தியானம்:
உங்களின் காமச் சிந்தனைகளை முழுவதுமாக குறைக்ககூடிய, உங்களின் வாழ்க்கையைப் பிரகாசமாக மாற்றக்கூடிய, தேவையில்லாத எண்ணங்களை அறவே நீக்கி, வாழ்வின் நெறிகளை உணர்த்தி, வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு அற்புத தியானப் பயிற்சி.
செய்முறை விளக்கம்:
- முதலில் தரையில் வலதுப் புரமாக திரும்பி (ஒருக்களித்து) படுத்துக்கொள்ளவும்.
- வலது கையை தலைக்கு முட்டு கொடுத்து தாங்கியப்படி இருக்க வேண்டும்.
- தலையை வான் நோக்கி அண்ணார்ந்து பார்த்தப்படி கண்களை மூடியவாறு இருக்க வேண்டும்.
- பிறகு வலது காலை மடித்து அதன் பாதத்தின் குழிப் பகுதியை, நீட்டியிருக்கும் இடது காலின் மூட்டின் மீது வைத்து கொள்ள வேண்டும் .
- அடுத்ததாக சுவாசத்தை ஆழப்படுத்த வேண்டும். அதாவது ஆழமாக சுவாசிக்க வேண்டும்.
- இவ்வாறு சுவாசத்தை குறைந்தது இருபது நிமிடமாவது செய்ய வேண்டும்.
- இவ்வாறு சுவாசிக்கும் போது மூச்சானது இட கலையில் ஓடுகிறது.
- எனவே எண்ணம் சீரமைக்கப்பட்டு, ஆசைகள் ஒழுங்குப் படுத்தப்படுகிறது.
- இதை தினமும் குறைந்தது இருபது நிமிடம் செய்து வந்தால் மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்கள் விலகி வாழ்வில் வெற்றியடைய வழிவகுக்கிறது.
எனது நேரடி பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்களை அறிய +918903078128
மேலும் தெரிந்துகொள்ள-Tendral International Foundation Tv - இதை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment